நானும் மணற்துகளும்

இப்பெருநகரத்தின்
ஒவ்வொரு சாலையும்
ஒவ்வொரு தெருவும்
அத்தெருக்களின் ஒவ்வொரு வளைவும்
உன்னை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன
உன்னோடு பயணித்த
நினைவுகளை சாலைகளும்
உன்னோடு நடந்துசென்ற
நினைவுகளை தெருக்களும்
உன் கைகளைப் பற்றிக்கொண்டு கதைத்துநின்ற நினைவுகளை தெருவளைவுகளும்...

சாகடிக்கும் நினைவுகளின் சல்லியத்திலிருந்து தப்பிக்க நினைத்தேன்
என்னை உறங்கவைத்து
என் நினைவுகளை மொத்தமாக
நானே களவாடி
பூக்கள் நிறைந்திருந்த
பை ஒன்றில் நிறைத்து
வங்கக்கடலில் வீசிவிட்டு
வந்து படுக்கையில் விழுந்தேன்

யாரோ புன்னகைக்கிற சத்தம்
அதே கடற்கரையில் நம் ஆழமுத்தத்தை முன்பொருமுறை அண்ணாந்து பார்த்து இலயித்திருந்த மணற்துகள் ஒன்று
என் கால் விரலிடுக்கில் அமர்ந்தபடி எனைப்பார்த்து சிரித்தது
என்னவென்று கேட்டேன்
எங்கே உன் காதலி என்றது

மீண்டும் உன் மொத்த நினைவுகளும் வரிசைகட்டி நினைவுக்கு வரவே,
இனி வாழ்வதற்கு வழியில்லை   என்பதறிந்து மாண்டுவிட
வழி தேடுகிறேன்.
என் கால்களைப் பற்றியபடி அம்மணற்துகளும் அதையே தேடுகிறது.

விஷன்.வி

1 comment:

  1. Hi Vishan, just now I found that you are a writer. Very good, keep it up.

    ReplyDelete